முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் 3வது ஆண்டு ஆட்சியில் பல முக்கிய சட்டங்கள் நிறைவேறும் - அருண்ஜெட்லி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2 ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. அவரது ஆட்சியின் 3வது ஆண்டில் பல முக்கிய சட்டங்கள் நிறைவேறும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு(என்.டி.ஏ.) கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பா.ஜ.கவின் தலைவரும் ,குஜராத் முதல்வராகவும் இருந்த, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான அரசு தற்போது 2ஆண்டுகளை பூர்த்தி செய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் மோடி அரசு பல முக்கிய சட்டங்களை 3வது ஆண்டில் நிறைவேற்றும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டெல்லியில் கூறினார். அ வர் மேலும் கூறியதாவது,

மோடி பதவியேற்றதும் முந்தைய ஆட்சி நிர்வாகம் போல் அல்லாமல் புதிய மாற்றத்தை கண்டது. பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்களும் அரசியல் மற்றும் நிர்வாக கலாச்சாரத்தில் பெரும் மாற்றம் செய்து இருக்கிறார்கள். மோடி அரசில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. கோப்புகள் எந்தவித தடையும் இல்லாமல் விரைவில்  பார்க்கப்படுகின்றன. மோடி அரசில் இடைத்தரகர்களோ வேலை இல்லா திண்டாட்டமோ கிடையாது. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

கூட்டாட்சி எப்போதும் இல்லாத அளவு மிகவும் மதிக்கப்படுகிறது.  இந்தியாவின் வளர்ச்சிக்கு முதலீடு தேவைப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் மிகவும் தள்ளாடின. ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 2ஆண்டுகளில் அதிக அளவு முதலீடு வந்துள்ளது.  பொது செலவினமும் அன்னிய நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, கிராமப்புறங்கள் மற்றும் இந்தியாவின் சமூக துறை ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை மீண்டும் மலர்ச்சி பெற்றுள்ளது. இந்திய கிராமப்புறங்களுக்கான இந்தய ஆண்டு செலவினம் முன்னர் இருந்ததைக்காட்டிலும் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டில் மேலும் 25 பிராந்திய விமான நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. ரயில்வேத்துறை வலிமைப்படுத்தப்படுகிறது.  400 முக்கிய ரயில்வே நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த மேம்பாடு நடவடிக்கையால் இந்திய ரயில்வேத்துறையின் நிலையில் பெரும் மாற்றம் வரும்.

இந்தியாவிற்கு தேவையான மின்சார அளவைக்காட்டிலும் கூடுதலான மின்சாரம் உள்ளது. கூடுதல்  முதலீட்டின் மூலம் துறைமுக திறன் வலிமைப்படுத்தப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான நடடிவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி, கிராமப்புற சாலைகள் விரிவாக்கம், கிராமப்புற தூய்மை, அனைவருக்கும் வீடு, பாசன வசதியை மேம்படுத்துதல், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு கூடுதல் தொகை, விவசாயிகளுக்கு தேவையான நிதிக்காக கூடுதல்  முதலீடு ஆகியவை இந்தியாவின் கிராமப்புற மேம்பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்