முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

மலாவாரா  - காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம் மலாவாரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடங்கினர். கிராமத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்  பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். 2, 3 பயங்கரவாதிகள் வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியது.

உடனடியாக பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்றது. புதன்கிழமை அன்று பாதுகாப்பு படையினர் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் இருவரை கைது செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.  கடந்த சனிக்கிழமை புல்வாமா மாவட்டம் பாம்போரில் பஸ்சில் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இந்த மாதத்தில் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே கடந்த 3-ம் தேதி பிஜ்பெகாரா என்னும் இடத்தில் பஸ்சில் சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்