முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான விமானத்தை தேடும் பணி : நேரில் ஆய்வு செய்ய மனோகர் பாரிக்கர் சென்னை வருகை

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மாயமான விமானத்தை தேடும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்னை வந்தார்.  சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர்.

அந்தமான் தீவுக்கும் சென்னைக்கும் இடையேயான தூரம் 1,360 கிலோ மீட்டர் ஆகும். அந்த விமானம் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு போர்ட்பிளேர் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் கிளம்பிச் சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்து விமானம் மாயமானது. அதாவது, சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானம் திடீரென்று காணாமல் போய்விட்டது.

மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மாயமான போது சென்னையில் இருந்து கிழக்கே கடல் பகுதியில் 151 நாட்டிக்கல் மைல் தொலைவில் காணாமல் போய் இருந்தது. எனவே அந்த இடத்தை மையமாக கொண்டு தேடுதல் பணி நடந்து வருகிறது.  நேற்று முன்தினம் இரவு சிறிது நேரம் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இது வரை எந்த பயனுள்ள தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை 17 போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. 6 விமானங்களும் அந்த விமானத்தை தேடி வருகின் றன.

இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணிகளை நேரில் ஆய்வு செய்யவும் மேலும் அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை புறப்படுவதற்கு முன் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனோகர் பாரிக்கர், மாயமான  விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தை தேடும் பணியில் ஐஎன்எஸ் ஸ்வாலா இணைய உள்ளது என்று தெரிவித்துள்ளார்.பருவ நிலை மாற்றம் காரணமாக விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்