முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.24 கோடி வசூல்

புதன்கிழமை, 3 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி  - திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோயில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு மனை, நிலப்பத்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக உண்டியல் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,300 டியும், ஒரு டன் தங்கமும், 1,500 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து வருகிறது.  நடப்பாண்டு கடந்த ஜூலை 18-ம் தேதி ரூ.4.69 கோடி உண்டியல் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

இதேபோன்று ஜூன் 27-ம் தேதி ரூ.4.22 கோடியும், ஜூலை ரூ.4.03 கோடியும் வருவாயாக கிடைத்தது.  கடந்த 1-ம் தேதி ரூ.4.24 கோடி உண்டியல் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 முதல் 3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்