முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ்: சானியா-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோ : ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே- ஹீத்தர் வாட்சன் இணையுடன், சானியா -போபண்ணா இணை பலப்பரீட்சை நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இந்திய இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி‌து. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிடும்.

அரையிறுதியில் தோல்வி அடைய நேரிட்டால், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட வேண்டும். சானியா, போபண்ணா இணை பதக்கத்தை நெருங்கி விட்டதால், இந்திய ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்