முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர் நாத் யாத்திரை முடிந்தது ,10ஆண்டுகளில் மிக குறைந்த பக்தர்கள் வருகை

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர்  -  அமர் நாத் யாத்திரை முடிவடைந்தது. தற்போதைய சீசனில் மிக குறைந்த பக்தர்களே அமர் நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வந்துள்ளனர். கடந்த 10ஆண்டுகளில் தற்போதைய சீசனில்தான் ,மிக குறைந்த பக்தர்கள் வந்திருக்கிறார்கள்.  காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினை வாதிகள் வன்முறை பேராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு 41 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுன் ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து நீடிக்கிறது.

 இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அமர் நாத் பனி லிங்க கோவிலை தரிசிக்கும் பக்தர்களின் 48 நாள் யாத்திரை நேற்றுடன் முடிவடைந்தது. காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால், அமர் நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் மிக குறைவாக இருந்தது.  கடந்த 10ஆண்டுகளில், இந்த சீசனில் முதல் முறையாக  தற்போதைய யாத்திரையில் மிக குறைந்த பக்தர்களே வந்துள்ளனர். நடப்பு சீசனில் 2.20லட்சம் பக்தர்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள். அமர் நாத் யாத்திரை பக்தர்கள் செல்லும் பகுதியில் வன்முறைகள் ஏதும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

காஷ்மீர் வன்முறையில் கடந்த ஒன்றரை மாதத்தில் இதுவரை 64பேர் பலியாகியுள்ளனர். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறை கலவரத்தை பாகிஸ்தான் தூண்டி விடும் நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு காஷ்மீர் மக்கள் பதட்ட நிலைக்கு ஆனாகியுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்