முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வரும் காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானிய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் சிறப்பாக தாக்கல் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு சமக நிறுவனத் தலைவர் ஆர் சரத்குமார் அறிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறிப்பாதாவது

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், 15 தலைப்புகளின் கீழ் 71 அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கு 209 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத் தக்கதாகும். நாட்டின் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளிலும், மக்களின் பாதுகாப்பிலும், சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் தேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் மானியக்கோரிக்கையின் அறிவிப்புகளில் காவல்துறையின் இடர்படி 2 மடங்காக உயர்த்தப்படும் என்றும், காவலர்களுக்கு 100 குண்டு துளைக்காத கவசங்கள் வழங்கப்படும் என்றும், 100 காவல்நிலையங்களில் 3கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், 5 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் வாகனங்கள் வாங்கப்படும் என்றும், தீயணைப்புத் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 10 கோடியே 26 லட்சம் செலவிடப்படும் என்றும், தீயணைப்பு வீரர்களுக்கு ஐந்தரை கோடி மதிப்பில் தற்காப்பு உடைகள் வாங்கப்படும் என்றும், ஊர்க்காவல்படையை பலப்படுத்த 45 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறைக்கான மேம்பாட்டுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்