முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்‌ஷி மாலிக்குக்கு டெல்லி அரசின் சார்பில் பாராட்டு விழா

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுத்தந்த பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோருக்கு டெல்லி அரசின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. டெல்லி அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிந்துவும் சாக்‌ஷி மாலிக்கும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளதாகவும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறினார். உங்களை எந்த அளவுக்கு நாங்கள் கவுரவித்துள்ளோம்? என்று தெரியவில்லை, ஆனால், இந்த விழாவில் கலந்துகொண்டதன் மூலம் எங்களை எல்லாம் நீங்கள் கவுரவித்து இருக்கிறீர்கள் என சிந்துவையும், சாக்‌ஷி மாலிக்கையும் அவர் பாராட்டினார்.

ஏற்புரையாற்றிய பி.வி. சிந்து, தன்னைப்போன்ற விளையாட்டு துறைசார்ந்த வீரர்-வீராங்கனைகளை தொடர்ந்து ஊக்குவித்துவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தி வெளியானதும் அவருக்கு டெல்லி அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என முதன் முதலில் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்