முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : 30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவ மழை கடந்த 20-ம் தேதியே தொடங்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், வரும் 30-ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது அதைவிட குறைந்த அளவில் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்போது கியான் புயல் நிலை கொண்டுள்ளது என்றும், வங்கக் கடலின் மேற்கு திசையை நோக்கி அது நகர்ந்து வருவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதனால், தமிழக மீனவர்கள் ஆந்திர கடலோர பகுதிக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்