முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க தேசத்துடன் மோதும் டெஸ்ட் போட்டியை நடத்த முடியாது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு- பி.சி.சி.ஐ அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை :  வங்க  தேச அணியுடன் ஆடும் டெஸ்ட் போட்டியை எங்களால் நடத்த முடியாது என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்தது. இதனால்    மாற்றங்களை சந்தித்து வரும் பிசிசிஐ அதிர்ச்சியடையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

வருகிற பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை வங்க தேசத்துடன் இந்திய அணி மோதும்  டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டியை நிதி பற்றாக்குறை காரணமாக எங்களால் நடத்த முடியாது என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்  இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ‘நிதிப் பற்றாக்குறை’ காரணமாக நடத்த முடியாது என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

வருகிற பிப்ரவரி மாதம்  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தங்களால் டெஸ்ட் போட்டியை நடத்த முடியாது என ஹைதராபாத் போன்ற கிரிக்கெட் சங்கங்கள் கூறி வருவது,கிரிக்கெட் ஆர்வலர்களையும் பிசிசிஐ-யையும் கவலையடையச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்