முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... முதல்வர் ராகத்தோடு பாடிய பாடல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று ராகம் போட்டு பாட்டு பாடினார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கில் முதன்முதலாக நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

அப்போது அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்றும் நலம் தானா நலம் தானா என்ற இரு பாடல்களையும் ராகத்தோடு பாடினார்,. முதல்வர் பன்னீர்ச்செல்வம்.

விழாவின்போது அவர் பேசியதாவது:

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கவிஞர் கண்ணதாசன். இவர் கவிஞர் மட்டுமல்ல,அரசியலிலும் பயணித்தவர். ஒரு முறை இவர் காங்கிரஸ் கட்சியில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காக காத்திருக்கிறார். அதை ஒரு சினிமாப் பாடலில், அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, வேறுஎவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி"" என்று பல்லவியாக்கினார்.கவிஞர் கண்ணதாசன். காங்கிரசில் சேர்ந்த பிறகு, அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, ""நலம் தானா? நலம் தானா? உடலும்உள்ளமும் நலம் தானா? என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல் நலத்தை விசாரித்தாராம். இவ்வாறு அந்த விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்