முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      தமிழகம்

சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது.17-ந்தேதிதான் ஓரளவுக்கு கூறமுடியும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அந்தமான் அருகே புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை விரைவில் உருவாக வாய்ப்பு உள்ளது. அதன்காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்