எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்களான மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் எஸ்.பி.திவாரி, மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்கள். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்ஷிணாமூர்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்கள் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கம்பு பயிர்களையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களையும், கீழச்செல்வனூர், கீழக்கிடாரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்களையும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மிளகாய் பயிர்களையும், நல்லான்குடி கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கேட்டறிந்தார்கள்.
அதன்பின்பு மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்திட 4 மத்திய கண்காணிப்பு குழுக்களின் கீழ் மொத்தம் 10 மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், இன்றைய தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தொடர்ச்சியாக 25.01.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் எங்கள் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 32 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 113 எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 397 எக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகளின் அடிப்படையில் 1லட்சத்து 21ஆயிரத்து 790 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 14ஆயிரத்து 421 எக்டேர் பரப்பளவிலான மிளகாய் பயிர்களும், 5ஆயிரத்து 496 எக்டேர் பரப்பளவிலான சிறுதானியப் பயிர்களும், 4ஆயிரத்து 79 எக்டேர் பரப்பளவிலான பயிர்வகைகளும், 3ஆயிரத்து 348 எக்டேர் பரப்பளவிலான எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 506 ஹெக்டேர் பரப்பளவிலான கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 50ஆயிரத்து 879 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பளவில் 98சதவீதம் ஆகும். நடப்பு ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,10,626 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு 1,15,312 விவசாயிகளின் மூலமாகவும், 6,756 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டள்ள மிளகாய் பயிர்களுக்கு 8,507 விவசாயிகளின் மூலமாகவும் பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் எங்களது மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு அதனடிப்படையில் மதிப்பீடு செய்து விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிடும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்வேந்தன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.