எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்களான மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் எஸ்.பி.திவாரி, மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்கள். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்ஷிணாமூர்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்கள் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கம்பு பயிர்களையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களையும், கீழச்செல்வனூர், கீழக்கிடாரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்களையும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மிளகாய் பயிர்களையும், நல்லான்குடி கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கேட்டறிந்தார்கள்.
அதன்பின்பு மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்திட 4 மத்திய கண்காணிப்பு குழுக்களின் கீழ் மொத்தம் 10 மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், இன்றைய தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தொடர்ச்சியாக 25.01.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் எங்கள் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 32 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 113 எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 397 எக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகளின் அடிப்படையில் 1லட்சத்து 21ஆயிரத்து 790 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 14ஆயிரத்து 421 எக்டேர் பரப்பளவிலான மிளகாய் பயிர்களும், 5ஆயிரத்து 496 எக்டேர் பரப்பளவிலான சிறுதானியப் பயிர்களும், 4ஆயிரத்து 79 எக்டேர் பரப்பளவிலான பயிர்வகைகளும், 3ஆயிரத்து 348 எக்டேர் பரப்பளவிலான எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 506 ஹெக்டேர் பரப்பளவிலான கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 50ஆயிரத்து 879 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பளவில் 98சதவீதம் ஆகும். நடப்பு ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,10,626 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு 1,15,312 விவசாயிகளின் மூலமாகவும், 6,756 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டள்ள மிளகாய் பயிர்களுக்கு 8,507 விவசாயிகளின் மூலமாகவும் பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் எங்களது மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு அதனடிப்படையில் மதிப்பீடு செய்து விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிடும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்வேந்தன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
02 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 2-ம் கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
02 Jan 2026சென்னை, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன. 6-ல் புதிய புயல் சின்னம் உருவாகிறது
02 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் திருச்சியில் வைகோவின் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
02 Jan 2026சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jan 2026சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
தஞ்சை பல்கலை. இணையத்தில் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தை பதிவேற்ற இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jan 2026சென்னை, தஞ்சை தமிழ்ப்பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
இனி நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது: வைகோவிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்
02 Jan 2026திருச்சி, மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் முதல்வர் மு.க.
-
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
02 Jan 2026கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் தோரட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
02 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.


