எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்களான மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் எஸ்.பி.திவாரி, மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்கள். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்ஷிணாமூர்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்கள் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கம்பு பயிர்களையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களையும், கீழச்செல்வனூர், கீழக்கிடாரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்களையும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மிளகாய் பயிர்களையும், நல்லான்குடி கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கேட்டறிந்தார்கள்.
அதன்பின்பு மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்திட 4 மத்திய கண்காணிப்பு குழுக்களின் கீழ் மொத்தம் 10 மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், இன்றைய தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தொடர்ச்சியாக 25.01.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் எங்கள் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 32 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 113 எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 397 எக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகளின் அடிப்படையில் 1லட்சத்து 21ஆயிரத்து 790 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 14ஆயிரத்து 421 எக்டேர் பரப்பளவிலான மிளகாய் பயிர்களும், 5ஆயிரத்து 496 எக்டேர் பரப்பளவிலான சிறுதானியப் பயிர்களும், 4ஆயிரத்து 79 எக்டேர் பரப்பளவிலான பயிர்வகைகளும், 3ஆயிரத்து 348 எக்டேர் பரப்பளவிலான எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 506 ஹெக்டேர் பரப்பளவிலான கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 50ஆயிரத்து 879 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பளவில் 98சதவீதம் ஆகும். நடப்பு ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,10,626 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு 1,15,312 விவசாயிகளின் மூலமாகவும், 6,756 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டள்ள மிளகாய் பயிர்களுக்கு 8,507 விவசாயிகளின் மூலமாகவும் பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் எங்களது மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு அதனடிப்படையில் மதிப்பீடு செய்து விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிடும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்வேந்தன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Sep 2025புதுடெல்லி, வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
வயநாட்டில் பிரியங்கா காந்தி
18 Sep 2025வயநாடு: வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
காசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
18 Sep 2025ஜெருசலேம்: காசா நகருக்குள் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதால் அங்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது: அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
18 Sep 2025பியாங்யாங்: அதிபர் கிம் போட்ட உத்தரவால் வடகொரிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.