முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளையம் பேரூராட்சி பகுதிகளில் மக்களின் குறைகளை நேரில் சென்று பரமசிவம் எம்,எல்,ஏ கேட்டறிந்தார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

குஜிலியம்பாறை : -  பாளையம் பேரூராட்சி பகுதிகளில் மக்களின் குறைகளை நேரில் சென்று பரமசிவம் எம்,எல்,ஏ கேட்டறிந்தார். உடன் ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன், நகரகழக செயலாளர் பெருமாள், செயலர் அலுவலர் மத்தியாஸ் அரசு அலுவலர்களுடன் ஒவ்வொறு கிராமங்களில் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான ராமகிரி, கொல்லப்பட்டி, குஜிலியம்பாறை, இலுப்பப்பட்டி, காட்டமநாயக்கன்பட்டி, செங்காளியூர், பண்ணக்காரன்பட்டி, வீரக்கனம்பட்டி, சாணிபட்டி, விராலிபட்டியில், பொதுமக்கள் நீர்; தேக்க தடுப்பணை பழுது அடைந்து உள்ளதால் புதிய தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். வறட்சிக்காரணமாக ஒரு சில கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அரசு அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து தடையின்றி தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும், இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ராமச்சந்திரன், பெரியசாமி, ஜவஹார், பாபுசேட் ஆறுமுகம், காளியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்