முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நேற்று முன் தீனம் ஜல்லிக்கட்டு கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையில் திரும்பிய நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவை திடீரென சந்தித்தார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கான வெற்றியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, தமிழக அரசு அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில், நேற்று முன் தீனம் காலை போராட்டம் திடீரென திசை திரும்பி சென்னையின் பல இடங்களிலும், கோவை, மதுரையிலும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தலைமை செயலகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று காலை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, திடீரென சந்தித்து பேசினார். சென்னை அடையாறு ராஜ்பவனி உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்