முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் மகசூல் கணக்கீடு பணி

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-   பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருவாய் கிராமம் வாரியாக அடிப்படை மகசூல் அளவு கணக்கீடு செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட  வருவாய் கிராமங்களில் வேளாண்மைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் அறுவடை பரிசோதனை பணிகளை மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்பார்த்து 1,55,305 எக்டர் பரப்பளவில் நெல்,சிறுதானியம் மற்றும் இதரப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. எதிர்பார்த்த அளவில் வடகிழக்குப் பருவமழை பெய்யாத காரணத்தினால் 1,53,340 எக்டர் பரப்பளவிலான பயிர்கள் வறட்சியின் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டன.  பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1,26,049 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். வறட்சியினால் ஏற்பட்டுள்ள  பயிர் பாதிப்புகளை மத்திய குழு அலுவலர்கள் மற்றும் மாநில அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு தொகை வழங்கிட ஏதுவாக மாவட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக அடிப்படை மகசூல் அளவு கணக்கீடு செய்வதற்காக புள்ளியல் துறையின் மூலம்  ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நெல் மற்றும் சிறுதானிய பயிர் வகைகளில் மொத்தம் 1,796 எண்ணிக்கையிலான பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் இதுவரை 1,736 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதுதவிர  பயிர், எண்ணெய் வித்து, பருத்திப் போன்ற பயிர்களுக்கு மொத்தம் 750 எண்ணிக்கையில் பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த பரிசோதனையின் முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பயிர் அறுவடை பரிசோதனைகள் அனைத்தும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக தொருவ@ர் கிராமப்பகுதியில் ராமநாதபுரம் பெரியகண்மாயின் உட்புற நீர்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மட்டியரேந்தல் கிராமப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது  வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வி.எஸ்.வெள்ளைச்சாமி, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்