எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று வாக்களிக்குமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் மா.பா .பாண்டியராஜன் உள்ளிட்ட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவர்னர் உத்தரவு
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விடுத்த அழைப்பினை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவரோடு 30 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் ஆட்சியமைத்த 2-ம் நாளான இன்றே பெரும்பாண்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக இன்று சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூவத்தூர் சென்று, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அரசு கொறடா கடிதம்
இதைத்தொடர்ந்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 134 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அதில் அரசை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். அரசை ஆதரித்து தான் அவர்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.கவில் தான் உள்ளார்
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாரே ?
பதில்: அதுபற்றி எனக்கு தெரியாது.
கேள்வி: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?
பதில்: அவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அ.தி.மு.கவில்தான் உள்ளார். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் சேர்த்து தான் தபால் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவர் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அரசை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: அவர்கள் எதிராக வாக்களித்தால் என்ன நிலை எடுப்பீர்கள்?
பதில்: அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எதிர்த்து வாக்களித்தால் என்ன நிலை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. மேலும் ஒ.பன்னீர்செல்வம் அணி என்று செய்திகள் வெளியாகின்றன. அப்படியொரு அணி இல்லை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் அணி, 10 பேர் இருந்தால் அது நபர்கள் தான்.
கேள்வி: நாளை (இன்று) யார் தீர்மானம் கொண்டு வருவார்கள்?.
பதில்: நாளை (இன்று) சபைக்கு வாருங்கள், அப்போது தெரியும் என்றார் அவர்.
ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, மாணிக்கம் உள்ளிட்ட எம்..எல்.ஏக்களுடன் தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். இதன்பின்னர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில் இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்போம் என்றார் அவர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
அவை முன்னவர்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அவை முன்னவராக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற அவை முன்னவராக ஒ.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.