எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தற்கால வளர் இளம் பெண்கள் பெரும்பாலும் பீசா, பர்க்கர், நூடுல்ஸ், பான்பூரி, பரோட்டா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பரோட்டா :- ஏழைகளின் உணவு என பரோட்டவை சொல்லுகிறார்கள். இது நாண்,குல்ச்சா, ரொமலி ரொட்டி என பல வேறு விசயங்களும் எடுத்துக்கிறது.1930 களில்தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதாமாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்டரி பவுடர். அதாவது பசைமாவு, இரண்டாம் உலப்போரின்போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால் மைதா மாவு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.
ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா சில ரசாயன சுத்திரிகரிப்புகளுக்கப் பிறகு அழகான பொருளாக பார்ப்போரை ஈர்க்கும் விதத்தில் பளிச்சென வெள்ளை ஆனது.மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென்ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. நாகரீகமான வார்த்தைகளில் சொன்னால் அதன் பெயர் ப்ளீச்சிங் கெமிக்கல், புரிகிற மாதரி சொல்வதானால் பினாயில் என்றுதான் சொல்லவேண்டும். கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற அலாக்சான் என்ற ரசாயானம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான்.
மேற்படி மைதாவை ரீபைண்டு ஆயிலோடு சேர்த்து தயாரிக்கிறோம். நச்ச ரசாயனங்களின் கூட்டணியில் அமைந்த பராட்டாவை நாம் சாப்பிடும் போது நமக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோய், pcod, obesity போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகிறது.
பிராய்லர் சிக்கன் :- உணவு உண்பது என்பது ஒரு வழிபாடு போல முன்பு இருந்தது.இப்பொழுது சாப்பிடுவது என்பது ஏதோ திருவிழா போல ஆகிவிட்டது. பிராய்லர் கோழியின் உடல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசி மனிதர்களுக்கு புற்று நோயை (கல்லீரல் புற்று) உருவாக்கும் தன்மை வாய்ந்தது என்ற அமெரிக்க ஆராய்ச்சி உணர்த்துகிறது. பிராய்லர் சிக்கனை பயன்படுத்துவோருக்கு உடல் பருமன் மற்றும் வளர்இளம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகிறது.
நூடுல்ஸ் :- தற்போது மினிபஸ் போகாத கிராமங்ளுக்கு கூட 2 மினிட்ஸ் நூடுல்ஸ் போய்விட்டது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் போதே ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க வேக்ஸ் என்னும் மெழுகு தடவப்படுகிறது. அது பெருங்குடலுக்கு ஆபத்தான ஒன்று. நூடுல்ஸ் சுவையை கூட்டுவதற்கா கூடுதலாக உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து சிறுநீரக பாதிப்பு வர காரணமாக அமைகிறது. மேலும் சுவையை கூட்டுவதற்காக ரசாயனக் கொழுப்பும் சேர்க்கப்படுகிறது. நலம்தரவேண்டிய ஒரு உணவு, சுவை கூட்டுவதற்காக சேய்யப்படும் மசலா கலவை, உப்பு, செயற்கைக் கொழுப்பு, சோடியம் ரசாயனக் சுவை கூட்டிகள் ஆகியவற்றால் நோய் தரும் நஞ்சாக மாற்றப்படுகிறது.
குளிர்பானங்கள் :- வளர் இளம் பருவத்தினரிடம் உணவுக்கு பதில் குளிர்பானங்கள் அதிகம் சாப்பிடும் நாகரீகம் பரவி வருகிறது. இந்த குளிர்பானங்களில் உள்ள செயற்கை பழச்சாறுகள், சுவையூட்டிகளும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பலவிதமான அமிலங்கள் கலக்கப்படுகின்றன. பொட்டாசியம், பென்சோவேட், சோடியம், சைக்ளோமேட், போன்ற வேதிப்பொருட்களையும் பெக்டின் ,அல்ஜினேட்,கராஜெனன் போன்ற திண்மையூக்கிளையும் பயன்படுத்துகின்றனர்.
சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற அமிலங்களும் மேற்கண்ட வேதிப்பொடுட்களும் இணைந்து நம் உடலை பதம் பார்க்கின்றன. இரைப்பையின் இயல்பு பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை உள்ளதாக மாறுகிறது. இரப்பை மற்றும் சிறுகுடல் பெருங்குடலில் புண்களை ஏற்படுத்தும் குணம் இப்பொருட்களுக்கு உள்ளது. தொடர்ந்து குளிர்பானம் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு உணவுகளில் இருந்து சத்துக்களை பிரிக்கும் தன்மை குறைந்து பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்றுவலி, வயிறு கனமான உணர்வு போன்ற தொந்தரவுகள் தோன்றும். காலப்போக்கில் முழு செரிமான இயக்கமே பாதிப்புள்ளாகும் அபாயம் இவ்வகை வேதிப்பொருட்களால் ஏற்படும். இக்காலத்தில் பெண்களுக்க ஏற்படும் எலும்புச்சிதைவு நோய்க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக குளிர்பானங்கள் இருக்கின்றன.
துரித உணவில் அதிர்ச்சி தரும் உண்மைகள் :- பாஸ்ட்புட் மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளும் எம்.எஸ்.ஜி என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. எந்தவகை ஹோட்டலாக இருந்தாலும் துரிதவகை உணவு என்றால் ருசிக்காக எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது.பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. எம்.எஸ்.ஜி யின் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும், அடிக்கடி உணவு உண்ணவேண்டும் என்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டுமில்லாமல் ,எம்.எஸ்.ஜி சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் தண்ணீர் அருந்தும் மற்றும் உணவு உட்கொள்ள பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் ஆனவகையாகவே உள்ளன. இவ்வாறு உபயோகிக்கும் பொழுது பிளாஸ்டிக்கில் உள்ள xeno Estrogen என்னும் கெமிக்கல் உடலுக்குள் ஊடுறுவி நமது இயற்க்கையாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை செயல்பாடின்றி செய்து ஈஸ்ட்ரோஜன் செயல்பாடு போல xeno Estrogen செயல்படும். ஆனால் xeno Estrogen னினால் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் போல் சினை உறுப்பு கருமுட்டை வளர வைக்கவோ, வெடிக்க வைக்கவோ முடியாது. இதனால் வளர்இளம் பெண்களுக்கு pcod ம் சினை உறுப்பு நீர்கட்டிகளும் உண்டாகி முறையற்ற மாதவிடாய் போக்கை உண்டாக்குகிறது. இதனாலேயே முன்மாதவிடாய் சிக்கல்களாக எரிச்சல், கோபம், டென்சன், மனஅழுத்தம், மன உளச்சல் முதலியன பெரும்பாலான வளர் இளம் பெண்களுக்கு உண்டாகிறது.
இதற்கான தீர்வு :- 1.கூடுமானவரை இயற்கை உணவுகளை மற்றும் ஆர்கானிக் உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். 2.துரிதஉணவுகளை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே ரெடி செய்து கொள்வது நல்லது. நம்முடைய பாரம்பரிய நூடுலான இடியாப்பத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். தினசரி உணவாக இருக்கும் நூடுல்ஸை படிப்படியாக மாற்றி சிறு தானிய உணவுகளைப் பழக்கப்படுத்தலாம். குளிர்பானங்களுக்கு பதிலாக வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், பழ ஜூஸ்களைக் குடிக்கலாம். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பராட்டாவிற்கு பதில் கோதுமை பராட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட பழக்கலாம். 3. ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. caffine, chocklate அதிகம் உட்கொள்ளக்கூடாது.
5. யோகாசனம், தியானம்,போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் "காலை மாலை தினம் நடப்பவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவான் காலனே"
6.தண்ணீர் அருந்துவதற்கு மண்பானை, மற்றும் செப்பு பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.( தண்ணீர் அருந்தும்போது இதில் உள்ள காப்பர் தனிமம் நமது உடலுக்குள் ஊடுறுவி சினை உறுப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது). பூப்பெய்திய முதல் ஓராண்டு வரையாவது பெண்கள் சரியான உணவு முறைகளை உட்கொள்ள வேண்டும். வயதுக்கு வருவது என்பது வெறுமனே உதிரப்போக்கு அல்ல. அந்த காலகட்டத்தில் பெண்ணின் கருப்பை, சினை உறுப்பு வளர்ச்சியும், இடுப்பு எலும்பு வளர்ச்சியும் மற்ற எலும்புகளின் வளர்ச்சியும் அதிகமாகிறது. எனவே அந்த நேரத்தில் ஏராளமான புரதம், கால்சியம்,மற்றும்இரும்புசத்து தேவை. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் பெண்கள் வயதுக்கு வரும்போது முட்டை ,நல்லெண்ணெய், உளுந்து போன்றவற்றை கட்டாயம் சாப்பிடத்தரும் பழக்கம் இருக்கிறது.
4.இரத்த சோகை :- வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு உட்கொள்ளாமை பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் பகல் உணவைத் தவிர்க்கிறார்கள். இயற்கை உணவான கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை,. சுகாதாரமற்ற முறையில் சாலை ஓரங்களில் கிடைக்கும் பாஸ்ட் புட் உணவு வகைகளை உட்கொள்வதினால் வரும் வயிற்றில் பூச்சி மற்றும் கிரிமி தொல்லைகளினாலும் இரத்தசோகை வரலாம். வளர் இளம் பெண்களுக்கு இப்பருவத்தில் வரும் ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினாலும் இரத்த சோகை வரலாம்.
இதற்கான தீர்வு :- இதற்குத்தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து காரணங்களை சரிசெய்ய வேண்டும். வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு- பழங்கள், கீரைகள், காய்கறிகள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் அப்பருவத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதினால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
5. தலைமுடி உதிர்தல் :- போதுமான சத்துணவு உட்கொள்ளாததினாலும், தேவையற்ற இராசாயன பொருட்கள் கலந்துள்ள சாம்புகளை பயன்படுத்தினாலும், தலைமுடி யை சரிவர பராமரிக்காததாலும், மலச்சிக்கல், இரத்த சோகை, போன்ற காரணங்களினாலும், அதிக மன அழுத்தத்தினாலும், தலைமுடி வேர்களுக்கு தேவையான இரத்த ஓடேடமும் போசாக்கும் கிடைப்பதில்லை.ஆகையால் தலைமுடி உதிர்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


