எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்களும் இன்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை சென்னை ஆலந்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜன. 8 ஆம் தேதி தொடங்கிவைத்தார். இந்த பரிசுத் தொகுப்புகள் நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக அந்தந்த நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று குறிப்பிட்ட தேதியிட்டு டோக்கன் விநியோகித்தனர்.
அந்த டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. டோக்கன் பெறாதவர்கள் அனைவரும் நேற்று நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு வசதியாக இன்றும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


