முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு நலப் பணித ;திட்ட சிறப்பு முகாம்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பல்லவன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நெமிலி கிராமத்தில் 22-02-2017 முதல் 28-02-2017 வரை ஏழு நாட்கள் நடைபெற்றது. இம்முகாமை பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும் மற்றும் புதுவைத் தமிழ்ச் சங்கதலைவருமான "கலைமாமணி" முனைவர் வி.முத்து துவக்கி வைத்தார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் கே.ஆர்.சீதாபதி முன்னிலை வகித்தார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் பொருளாளர் என்.சம்பந்தமூர்த்தி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சி.கோபிநாத் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார். இம்முகாமில் நெமிலி புன்னகேஸ்வரர் ஆலய வளாகத்தை தூய்மை படுத்துதல், மின்னனு பணபரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வு முகாம், மின்சார சிக்கனம் பற்றிய பரப்புரை முகாம், உயர் கல்வி பயில்வதற்கான ஆலொசனை முகாமஇ; சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம், கண் பரிசோதனை முகாம், மருத்துவ முகாம், மரம் நடும் முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பபட்டன. இம்முகாமில் நண்டு மார்க் லுங்கி கம்பெனி உரிமையாளர் வி.எஸ்.கடிகாச்சலம்இ பல்லவன் பொறியியல் கல்லூரி இயக்குனர்கள் டி.ஜி.பழனிஇ ஆர்.ஜானகிபுருஷோத்தமன்இ எஸ்.மஞ்சுளாதேவி சிவசண்முகம் கே.மீனாம்பாள் குப்புசாமிஇ டி.ஜி.எத்திராஜ்இ நெமிலி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஏ.வேதையா, ஏ.வேலாயுதம் டாக்டர். எம்.பி.நடராஜன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாம் நிறைவுவிழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்முகமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் எம்.ஆர்.சிவக்குமார் மற்றும் முனைவர் ஏ.பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்