எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி, பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நடைபெற்ற யானைகள் நலவாழ்வு நிறைவு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது
பகுத்துணரும் ஆற்றலும் உணர்ந்ததை எடுத்துச் சொல்லும் திறனும் கொண்ட சிறப்பான பிறவி மானிடப்பிறவி ஆகும். ஆனால் மனிதனுடைய உணர்வுகளைப் போலப் பகுத்துணரும் ஆற்றலுடன் தன் பிணைகளை விட்டுக்கொடுக்காது காலமெல்லாம் காப்பாற்றி வாழும் கூட்டுக் குடும்பக் கட்டமைப்பைப் பெற்றவை யானைகள் என்பது சங்க இலக்கியங்கள் மூலமாக நமக்கு தெரியவருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களும் நம்முடைய அன்புக்கு உரியவை என்ற அடிப்படையில் விலங்குகளிடத்தில் அன்பும், கருணையும் கொண்ட அம்மா 2003-ஆம் ஆண்டில் மயிலாப்பூரில் ஒரு யானை, கடுமையாக நடத்தப்பட்டு பிச்சை எடுப்பதற்கு அதனை முறைகேடாக பயன்படுத்துவதை அறிந்து மருத்துவ சிகிச்சையும் அடைக்கலமும் அளிப்பதற்காக அந்த யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி அதனைப் பாரமரிக்க ஏற்பாடுகள் செய்தார்.
யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் போதுமான ஒய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல்நலத்தைப் பேணவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென அம்மா ஆணையிட்டு 2003 ஆண்டில் நீர் வசதிமிக்க சிறப்பான சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை (தெப்பக்காடு) வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திட ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து நடப்பு முகாமினையும் சேர்த்து இது வரை 9 யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு ரூ.1,16,85,000/- (ரூபாய் ஒரு கோடியே பதினாறு இலட்சத்து எண்பத்தி ஐந்தாயிரம்) அரசால் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான 31 யானைகளும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து 2 யானைகளும் ஆக மொத்தம் 33 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்றுள்ளன.
முகாமிற்கு வர இயலாத யானைகளுக்கு அவைகள் இருக்கும் இடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்று உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டது. முகாமில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம், பயோ பூஸ்ட் ஆகியன வழங்கப்பட்டது. காலை மாலை இருவேளையும் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் எல்லா யானைப் பாகன்களுக்கும் சிறப்புப் பயிற்சியும் தரப்பட்டது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த யானைகளின் சிறப்பு நலவாழ்வு முகாமினை சுற்றிலும் பாதுகாப்பினை பலப்படுத்த சோலார் தொங்கும் மின்வேலி, சோலார் மின்வேலி மற்றும் தகர தடுப்பு வேலி ஆகியன அமைக்கப்பட்டது. காட்டு விலங்குகளின் நடமாட்டத்தினை காண்காணிக்கும் வகையில் முகாமில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாகன்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்காக சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ அரங்கு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தினசரி மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தது. அதே போன்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களை கொண்டு தினசரி யானைகளுக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், யானை பாகன்களின் மனநலம் புத்துணர்வு பெறும் வகையில் பொழுது போக்குக்கூடம், விளையாட்டு களம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டதுடன், யோகா பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கடந்த 04.03.2017 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியத்துறைகளின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்று வந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இனிதே நிறைவு பெற்றது என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரசண்முகமணி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன் இ.வ.ப மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.