முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரமேரூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர வேண்டிய பருவ மழை பெய்ததுப் போனதாலும் கோடைகாலம் விரைவில் துவங்கியுள்ள நிலையில் தற்போது வெய்யில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் வெய்யிலின் பிடியிலிருந்து பொது மக்களை காத்திடும் வகையில் அதிமுக சார்பில் கோடை காலத்தில் துவங்கப்படும் நீர்மோர் பந்தல் முன்னதாகவே உத்தரமேரூர், திருப்புலிவனம் உள்ளிட்ட இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெருமந்தூர் எம்.எல்.ஏ பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர். திருப்புலிவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பொது மக்கள் பயன்பெரும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. மோர், இளநீர், எலும்பிச்சை ஜீஸ், வெள்ளேரி உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை சந்திரமௌலி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் பொ.சசிகுமார், மானாம்பதி ரவிசங்கர், துரைபாபு, கே.சி.எம்.விஜய் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்