எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காப்புரிமை பிரச்சினையில் இளையராஜா-எஸ்.பி.பி. பிரிவால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் கேட்கின்றனர்.
இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக் கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, அதை ஏற்றுக் கொண்டு ‘இனி உன் பாடலை பாட மாட்டேன்’ என்றார் எஸ்.பி.பி.பால்ய நண்பர்களான இவர்கள் இருவரிடையே என்ன நடந்தது? கச்சேரிகளில் மேடைகளில் ரசிகர்கள் முன் இரு வரும் ஒருவரையொருவர் வாடா.... போடா... என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்.
ஆனால் இப்போது இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்று ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், யூகங்கள்.. அரசியல் பரபரப்பையும் மீறி, இவர்கள் பற்றியே இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன.ஒரு திரைப்பட பாடலானது இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என மூவரது பங்களிப்புடன் உருவாகிறது.இதில் இசைஅமைப்பாளருக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது. பாடலை காட்சிக்கு ஏற்ப எந்த ராகத்தில் உருவாக்க வேண்டும். என்னென்ன இசைக் கருவிகளை எந்தெந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் இசை அமைப்பாளர்தான் உருவாக்கி அதை இசைக் குறிப்பாக இசைக் கலைஞர்களிடம் கொடுக்க அதன்படி இசைக் கலைஞர்கள் இசைக்க இப்படித்தான் இசை உருவாகிறது.
யார் பாட்டெழுதினால், எப்படி எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்பதையும் இசை அமைப்பாளர்தான் முடிவு செய்வார்.இசை அமைப்பாளர் உருவாக்கிய டியூனுக்கு தகுந்தவாறு பாடல் ஆசிரியர் பாடல் வரிகளை எழுதிக் கொடுப்பார். அதை தனது இசைக் குழுவில் உள்ள சாதாரண பாடகர்களைக் கொண்டு பாட வைத்து ரிகர்சல் (மாதிரி) எடுத்து அதில் திருத்தங்கள் செய்யப்படும். கடைசியாக பாடகர்களைக் கொண்டு பாடச் செய்து பதிவு செய்யப்படும். பாடலின் ஏற்ற இறக்கங்கள், ராகங்கள் போன்றவற்றையும் இசை அமைப்பாளரே திருத்தங்கள் செய்வார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்ற பாடகர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தாலும், இசை ஞானத்தாலும் எளிதில் இசை அமைப்பாளர்கள் நினைப்பதை புரிந்து கொண்டு பாடி விடுவார்கள். இதனால்தான் திரை உலகில் பிரபலங்களுக்கு மவுசு உண்டாகிறது.
படத்துக்கு யார் இசை அமைப்பாளர் என்பதை படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து அவருக்கு மொத்தமாக சம்பளம் பேசி கொடுத்து விடுகிறார்.அதன் பிறகு யார் பாடுவது? பாடலாசிரியர் யார்? இசைக் கலைஞர்கள் போன்ற மற்ற முடிவுகளை இசை அமைப்பாளரே எடுக்கிறார்.ஒரு படத்துக்காக உருவாக்கப்படும் பாடல்களை படத்தயாரிப்பாளர் இசை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வார். காப்புரிமை சட்டப்படி ஒரு பாடலுக்கான காப்புரிமையில் தயாரிப்பாளருக்கு பாதி பங்கும் மீதியில் இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் ஆகியோருக்கு சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போதுள்ள காப்புரிமை சட்டப்படி பாடகர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே தான் காப்புரிமையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாடகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
பாடல்களை விலைக்கு வாங்கிய இசை நிறுவனங்கள் தங்களுக்குத்தான் பாடலுக்கான காப்புரிமை சொந்தம் என்றும் கூறுகிறது.பொதுவாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐ.பி.ஆர்.எஸ். (இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி) நிறுவனத்திடம் ஒரு தொகையை கட்டி அனுமதி பெற வேண்டும். இந்த தொகை இசை நிறுவனம், இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் என மூவருக்கும் 5: 3: 2 என்ற விகிதத்தில் பிரித்து கொடுக்கப்பட வேண்டும்.இந்த ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்பதே இப்போதைய குற்றச்சாட்டு.
தற்போது யு டியூப், எப்.எம்., தொலைக்காட்சி மற்றும் இசை சேனல்கள், இசை ஆப்கள் ஏராளமாக உருவான நிலையில் அவைகளிடம் இருந்து வசூலிக்கப்படும் காப்புரிமை தொகை இசை அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் போய்ச் சேரவில்லை.இசையில் முன்னணியில் இருக்கும் இளையராஜாவுக்கே ஆண்டுக்கு ரூ.15 லட்சம்தான் கிடைக்கிறது. எனவேதான் தனது பாடல்களை அனுமதியின்றி பாடுவதை எதிர்த்து களம் இறங்கி இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வசூலிக்கும் பெரும் தொகை எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.வருகிற 31-ந்தேதி காப்புரிமை அமைப்பான ஐ.பி.ஆர்.எஸ். புதிய உறுப்பினர்கள் தேர்வு நடக்கிறது. அவர்கள் தான் இதுபற்றி முடிவு செய்வார்கள்.இதை எதிர்நோக்கித்தான் தற்போது காப்புரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறிய தாவது:-ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தான் ராயல்டியை பிரித்துக் கொடுக்கிறது. வருகிற 31-ந் தேதி ஐ.பி.ஆர்.எஸ். அமைப்புக்கு தேர்தல் நடத்தி புதுபோர்டு வருகிறது. ராயல்டியை மாற்றி அமைப்பது பற்றி புதுபோர்டு முடிவு செய்ய இருக்கிறது.இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டு போடுவதைத் தவிர எதையும் எதிர்பார்த்தது கிடையாது. இன்றைக்கு இசை வணிக மயமாகி விட்டது. பணம்தான் முக்கியமானதாக கருதப்படுகிறது.நான் இளையராஜா ரசிகன். எஸ்.பி.பி. கச்சேரிக்கு ரசிகனாக செல்கிறேன். அப்போது “மன்றம் வந்த தென்றலுக்கு”..., “இளைய நிலா பொழிகிறதே...”, “பொத்திவச்ச மல்லிகை மொட்டு...”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி...” பாடல்களை விரும்பி கேட்பேன். இதற்கு தடை போடக்கூடாது என்றார்.
தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - எஸ்.பி.பி. இருவர் மீதும் அளவிட முடியாத பாசம் கொண்டுள்ளனர். இருவரையும் சேர்த்துத்தான் பார்க்கிறார்கள். காப்புரிமை பிரச்சினையை சட்டப்படி முடிவு செய்யட்டும். ஆனால் எங்களால் இசையை கேட்காமல் இருக்க முடியாது என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார், இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதான் அவர்களுக்கிடையேயான பெருந்தன்மை. இதையே சிலர் உள்ளே புகுந்து சொந்த பகையை தீர்த்துக் கொள்வது சரியல்ல என்பதே ரசிகர்கள் கருத்து
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
3 டன் மலர்களை கொண்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
13 May 2024திருப்பதி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.