முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் : அ.தி.மு.க அம்மா தலைமைக்கழகம் அறிவிப்பு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - "அ.தி.மு.க. அம்மா" தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது  , வடசென்னை வடக்கு மாவட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு, அடுத்தமாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர்  கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் வாரியத் தலைவர்  ஆர். முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் எம். ஆனந்தன், செல்வி ராமஜெயம், வளர்மதி ஜெபராஜ், பேராசிரியர் க. பொன்னுசாமி, கோமதி சீனிவாசன், திரு. டி. இன்பத்தமிழன், முன்னாள் வாரியத் தலைவர்கள் எஸ். கலைச்செல்வன்,  சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. ஆதித்தன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றும் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்