எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொல்லிமலை மலைவாழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நேற்று (18.04.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருமக்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,தமிழக அரசு மாநில சமச்சீர் நிதி சிறப்புத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்து அதில் தேர்வு செய்யப்படுகின்ற பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டு 5 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் கொல்லிமலை வட்டாரம் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டு, இவ்வட்டாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேளாண்மைத்துறையின் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்பு திட்டத்தின் கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதன்மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளும், உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கொல்லிமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை வளர்ச்சிக்காக ஒரே மாதிரியான பல்வேறு வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற பின்தங்கிய வட்டாரத்திற்கென தனிகவனம் செலுத்தி வேளாண்மைத்துறையின் பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கி வருகின்றது. வேளாண் திட்டங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் இத்தகைய விவசாயிகளுக்கு வழங்கி வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. கொல்லிமலையில் நன்கு விளையக்கூடிய மிளகு, காபி போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்திட வேளாண் பெருமக்கள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திட வேண்டும். மேலும் நஞ்சில்லா விவசாயம் என்பதற்கேற்ப இயற்கை வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் முழுமையாக ஈடுபடவேண்டும். மண் வளத்தையும், மனித இனத்தையும் காத்திட இயற்கை வேளாண் உற்பத்தி முறையில் விவசாயிகள் ஈடுபட்டால் அதிக இலாபம் ஈட்டமுடியும். அதன்மூலம் சமூதாயத்திற்கும் நஞ்சில்லா நல்லா பொருட்களை உற்பத்தி செய்து வழங்கவும் முடியும். எனவே வேளாண் பெருமக்கள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குவதோடு, அதன்மூலம் நல்ல வருவாயை ஈட்டி தங்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார். மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தானம் அறக்கட்டளையின் சார்பாக கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு ரூ.3,80,000 மதிப்பீட்டில் காபி, மிளகு, சவுக்கு கன்றுகளையும், 12 விவசாயிகளுக்கு ரூ.40,400 மதிப்பிலான கைத்தெளிப்பான் கருவிகளையும், 10 விவசாயிகளுக்கு ரூ.20,000 மதிப்பிலான தேனி வளர்ப்பு பெட்டிகளையும், 4 விவசாயிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான இயற்கை மண்புழு உரம் தயாரிப்பிற்கான உபகரணங்களையும், 5 விவசாயிகளுக்கு ரூ.6,000 மதிப்பிலான நுண் உயிர் உரங்களையும், 10 விவசாயிகளுக்கு ரூ.2,300 மதிப்பிலான மண்வள அட்டைகளையும், 1 விவசாயிக்கு ரூ.8,618 மானியத்துடன் ரூ.18,098 மதிப்பீட்டில் நீர் இறைக்கும் மோட்டார் பம்பு செட் கருவியினையும், 1 வாழவந்தி நாடு மிளகு உற்பத்தி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு டி.விரிடி உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூ.30,347 மதிப்பிலான இடுபொருட்களையும், ஒருங்கிணைந்த மேலாண்மைத்திட்டத்தின் கீழ் 8 மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.00 இலட்சம் சுழல்நிதிக்கான காசோலைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.59,853 மதிப்பிலான தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் பாசனக்கருவிகளையும், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.1,05,000 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்காக காசோலைகளையும், 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், 6 நபர்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு என இவ்விழாவில் மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.8,86,978 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இவ்விழாவில் கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், சென்னை மாநில திட்டக்குழும (வேளாண்மை) துறைத்தலைவர் டாக்டர்.கே.ஆர்.ஜெகன்மோகன், மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் பி.கணேசன். மாவட்ட திட்ட மைய செயலர் எம்.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாத பிரகாசம், கே.வி.கே.கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் (உழவியல் துறை) டாக்டர்.எஸ்.அழகுதுரை, டாக்டர்.சி.சர்மிளா பாரதி (தோட்டக்கலைத்துறை) கொல்லிமலை வேளாண்மை அலுவலர் டி.கௌதமன், தானம் அறக்கட்டளை திட்ட தலைவர்கள் எ.மதன்குமார் (மதுரை), எம்.சந்தானம் (சென்னை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தானம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.