முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் தவறு செய்துவிட்டோம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒப்புதல்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தேர்தலில் தவறு செய்துவிட்டோம் அதனை ஆய்வு செய்வோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி தோல்வி
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப், கோவா சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.  ஆம் ஆத்மி கட்சி தோல்விக்கு காரணம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறிவந்தனர். அதனை தொடர்ந்து டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது. இதற்கும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே என கூறிவந்தனர்.

தவறு செய்துள்ளோம்
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வந்தேன். அதில் உண்மை நிலவரம் தெரியவந்தது. நாங்கள் தவறு செய்துள்ளோம். அதனை மறு ஆய்வு செய்து திருத்தி கொள்வோம். மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்