எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று வாசனை திரவியக்கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பாக அரங்குகள் அமைத்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியத்தலைவர் பேசியதாவது, “இந்த வாசனை திரவிய கண்காட்சியின் நோக்கமே மக்களிடத்தில் வாசனை திரவியங்களின் நற்பண்புகளையும், பயன்களையும் விளக்குவதன் மூலம், வாசனை திரவியங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது. அதன்மூலம் வாசனை திரவியங்களை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபத்தை பெற்று தருவதே ஆகும். அதேபோல இக்கண்காட்சியின் மற்றொரு நோக்கம், வாசனை திரவியங்களை பயிர் செய்யும் விவசாயிகளிடம், வாசனை திரவியங்களை எவ்வாறு மதிப்பு கூட்டுவது என்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதாகும்.
பண்டைகாலம் கொண்டே வாசனை திரவியங்களை அடையாளம் கண்டு, அதை முறையாக பயன்படுத்தியவர்களும், தேவைக்கு அதிகமாக இருந்தபொழுது அதை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவர்களும் இந்தியர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாறு கூறுகிறது. நமது முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்தனர். மருத்துவ குணங்கள் அடங்கிய இவ்வாசனை திரவிய பொருட்களை பயன்படுத்தினர். எனவேதான் நோய் நொடியில்லாமல் வாழ்க்கை நடத்தினர். உதாரணமாக குருமிளகு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புற்றுநோயை தடுக்கும். விஷத்தன்மையை முறிக்கவல்லது. ஏலக்காய் சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்கும், சிறந்த மனமுடையது, நுரையீரலுக்கு வலு சேர்த்து ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். கிராம்பு பல் வலிக்கு சிறந்த நிவாரணம் தரவல்லது. பட்டை இரத்த ஓட்டத்தை சீராக்கும், வயிற்றுப்போக்கு, இருமலுக்கு சிறந்த மருந்து. இப்படி ஒவ்வொரு வாசனை திரவிய பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ பயன்கள் உண்டு.
ஆதலால்தான் மொத்தமுள்ள 109 வாசனை திரவியங்களில் 70 வகையான வாசனை திரவிய செடிகளை நாம் பயிரிட்டு வருகிறோம். அதனடைப்படையில் வாசனை திரவிய பயிர்கள் வளர்ப்போரை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 758 பயனாளிகளுக்கு 500 ஹெக்டர் பரப்பில் இஞ்சி நாற்றுகள் பயிரிடவும், 150 பயனாளிகளுக்கு 105 ஹெக்டர் பரப்பில் கிராம்பு பயிரிடவும், 154 பயனாளிகளுக்கு 160 ஹெக்டர் பரப்பில் ஜாதிக்காய் பயிரிடவும், 452 பயனாளிகளுக்கு 375 பரப்பில் மிளகு பயிரிடவும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, சீரகம், ஜாதிபத்திரி, வெந்தயம், மிளகாய், கொத்தமல்லி, குருமிளகு ஆகியவற்றைக் கொண்டு வாசனை திரவிய ஹெலிகாப்டர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை கவருவதாக உள்ளது. அதேபோல வாசனை திரவிய பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு சிறப்பாக உள்ளது. அதை அமைத்த தோட்டக்கலை அலுவலர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அரங்கங்கள் அமைத்துள்ள விவசாய பெருங்குடி மக்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் வாசனை திரவிய பொருட்களின் பயனறிந்து, அதனை வெறும் உணவிற்கு சுவை சேர்ப்பதற்காக மட்டும் சேர்க்காமல், அதன் மருத்துவ பயன்களை முறையாக அறிந்து அதனை நாம் பெறும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இவ்வாசனை திரவியக்கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பாக அரங்குகள் அமைத்த 20 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.தினகரன், வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்