முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தலா ரூ 3 லட்சம் நிதி உதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,,காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மகாபலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்,சேலம் மாவட்டம், அதிகாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும். முருகன், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கரன்;நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை கிராமம், ராஜேந்திரன்;விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  முத்துமாயாண்டி;சென்னை மாவட்டம், அயனாவரம் வட்டம், கொளத்தூர் பூம்புகார் நகரைச்சேர்ந்த சந்திரா;ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கோடாரேந்தல்கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்;ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த மேற்கண்ட நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்