முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தொடர்பான பணிகள்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கடலூர்

சிதம்பரம் நகராட்சி மேலவீதியில் உள்ள இராமசாமி செட்டியார் குடிநீர் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயிலிருந்து மோட்டார் மூலம் சட்டவிரோதமாக குடிநீரினை உறிஞ்சிய வீட்டு உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 65 மின் மோட்டார்களை பார்வையிட்டார்.

 கடுமையான நடவடிக்கை

கலெக்டர் ,  சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறும், மின் மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சுபவர்களிடமிருந்து மோட்டார்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறும் சிதம்பரம் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.பிறகு கலெக்டர் , வார்டு 18ல் உள்ள வீரபத்ர சுவாமி கோவில் தெருவில் ரூ. 18.65 இலட்சம் மதிப்பீட்டில் 780 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன், இளநிலை பொறியாளர் தனபாண்டியன், மேலாளர் கலைச்செல்வன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்