முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சானியா - போபண்ணா ஜோடிகள் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      விளையாட்டு
Image Unavailable

ரோம் : இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்  இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடிகள் தோல்வியடைந்து வெளியேற்றின.

ஜோகோவிச் வெற்றி

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதியில் 2-ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை (அர்ஜென்டினா) வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். அதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னெரை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.

சானியா தோல்வி

இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி 6-7 (5), 7-6 (2), 10-12 என்ற செட் கணக்கில் பிரான்சின் நிகோலஸ் மகுத்- ஹெர்பர்ட் இணையிடம் போராடி வீழ்ந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்தை) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி 3-6, 7-6 (7) என்ற நேர் செட்டில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீனத்தைபே) கூட்டணியிடம் தோற்று நடையை கட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்