முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித்ஷா உறுதி

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      இந்தியா
Image Unavailable

ஐதாராபாத் : தெலுங்கானா மாநிலத்துக்கு 3 நாட்கள் பயணமாக வந்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா, விரைவில் இங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நல்கொண்டாவில் உள்ள தேரத்பல்லி கிராமத்தில் வாக்குச்சாவடி மட்ட கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா கூறியதாவது ,

 “பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பயணத்தில் தெலுங்கானா இணைய வேண்டும் என்று இம்மாநில மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். தெலுங்கானாவில் பாஜக ஆற்றும் பணிகளைப் பார்க்கும் போது வரும் நாட்களில் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். உலகிலேயே பாஜக 11 கோடி உறுப்பினர்களுடன் உள்ள பெரிய அரசியல் கட்சியாகும்.

நரேந்திர மோடி அரசு ஏழைகள், பெண்கள், தலித்கள், பழங்குடியினர், மாணவர்கள், இளைஞர்கள் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது, ஆனால் தெலுங்கானாவில் இவை எதுவும் மக்களைச் சென்றடையவில்லை. நான் சில வீடுகளுக்குச் சென்ற போது அங்கு கழிப்பறை வசதிகள் இல்லாததைக் கண்டேன். நாடு முழுதும்  பல்வேறு கழிப்பறைகளைக் கட்டியுள்ளோம். ஆனால் தெலுங்கானா அரசு இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்