முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அணி அரையிறுதிக்கு தகுதி: வாழ்த்து தெரிவித்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்கால் சர்ச்சை

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் வாழ்த்து தெரிவித்தற்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உமர் பரூக் வாழ்த்து

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான மிர்வாய்ஸ் உமர் பரூக் வாழ்த்து தெரிவித்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விமர்சனங்கள்

மிர்வாய்ஸ் உமர் பரூக் தனது ட்விட்டர் பக்கத்தில், பட்டாசுகள் வெடிக்கும் சத்தத்தை கேட்க முடிகிறது. பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியா வெற்றி பெற்ற எந்த ஓரு போட்டிக்கும் வாழ்த்து தெரிவிக்காத மிர்வாய்ஸ் உமர் பரூக், பாகிஸ்தானுக்கு வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.  மிர்வாய்ஸ் உமர் பரூக்கின் இத்தகைய செயல் அவரது உண்மை சுயரூபத்தை வெளிக்காட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் காஷ்மீரில் உள்ள சில இளைஞர்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடி ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து