முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: தாவூத் இப்ராகிம் கூட்டாளி உட்பட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை, மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி முஸ்தபா தோசா உட்பட ஆறு பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை குண்டு வெடிப்பு

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுவெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் யாகூப் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட மொத்தம் 100 பேருக்கு கடந்த 2006-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

6 பேர் மீதான வழக்கு  தீர்ப்பு

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட தாதாக்கள் அபு சலீம், முஸ்தபா தோசா மற்றும் ஃபெராஸ்கான், தாகீர் மெர்சன்ட், ரியாஷ் சித்திக், அப்துல் குவாயும் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மும்பை தடா நீதிமன்றம் நேற்று  "மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் சதி செயலில் ஈடுபட்ட முஸ்தபா தோசா மற்றும் ஃபெராஸ்கான், தாகீர் மெர்சன்ட், அப்துல் கய்யம் அன்சாரி, கரிமுல்லா ஷேக் ஆகியோர் குற்றவாளிகள்" என்று தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து