எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அவரது நினைவு மண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்திலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கழக அரசுதான் கொண்டாடும் என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்ன அந்த தெய்வ வாக்கு பலித்து, இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க அரசுதான் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பிலான இடத்தினை மேம்படுத்தி, சென்னை மாநகராட்சி மூலம் இயற்கை எழில்கொஞ்சும் பூங்கா ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா காணும் நிலையில் உள்ளன.
முத்தாய்ப்பாக ஒருபுறத்தில் வங்கக் கடல் அலை வந்து வந்து தாலாட்ட, மறுபுறத்தில் மக்கள் கடல் அலையாய் வந்து வந்து கண்ணீர் வடிக்க, மக்கள் திரள் தினந்தோறும் வந்து வந்து வழிபட்டு மகிழும் ஒரு புனிதத்தலம் சென்னையில் உள்ளது. அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த கீர்த்தியாகி அல்லலுறும் ஏழைகளே இல்லையெனும் நிலைமைதனை ஆக்கிய மூர்த்தியாகி தங்குதடை ஏதுமின்றி தமிழகம் முன்னேறதான் தேய்ந்து புனிதமாகி தரணியெங்கும் புகழுடலால் தான் நிறைந்துவான் கலந்த வரலாறாய் மாறிவிட்ட அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தான் அது.
சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில், நினைவு மண்டபம் அமைக்க செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கையாக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,கோயம்புத்தூர் மாவட்டம், கொண்டையம் பாளையம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க இத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் இத்துறையில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் குறித்து தமிழக மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் 360 டிகிரியில் படம் எடுக்கப்பட்டு அதனை செய்தி மக்கள் தொடர்புத்துறை இணையதளம் மற்றும் கூகுள் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2017 முதல் ஜனவரி 2018 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார் என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு அங்கீகாரத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பட்டயப் படிப்புகள் இளங்கலை காட்சிக்கலை நான்காண்டு பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆறுபட்டப் படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன.
இதுவரை, செய்தி-மக்கள் தொடர்புத் துறையால் 183 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அரசுக்கு, ஏறத்தாழ 37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிகர வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரிசல்ட் வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி. தகவல்
12 May 2024சென்னை : வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஊட்டியில் மலர் கண்காட்சியை காண 3-வது நாளாக குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 3-வது நாளாக நடந்து வரும் மலர்க்கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்து கண்டு ரசித்தனர்.
-
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
ஸ்டார் விமர்சனம்
13 May 2024சின்ன வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார்.