முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுங்கையூர் விபத்தில் மேலும் 5 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கொடுங்கையூர் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த மேலும் 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

48 நபர்கள் காயம் ...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், மீனாம்பாள் சாலை, சிட்கோ நகர் மெயின் ரோடு சந்திப்பு, கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான உணவகத்தில், கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூடியிருந்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், சுமார் 48 நபர்கள் பலத்த காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் உயிரிழப்பு ...

மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கொடுங்கையூர், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சேலவாயல், சுகந்தம்மாள் 3-வது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் 22-ம் தேதி  வியாசர்பாடி, எம்.கே.பி நகரைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் பி.வி காலனியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் 23-ம் தேதியும் கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் நரேஷ் என்பவர் நேற்று உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

நிதியுதவி அறிவிப்பு

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கண்ணன், பாஸ்கரன், பார்த்திபன், மணிகண்டன்  மற்றும் நரேஷ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து