முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி: அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3 இடங்களுக்கு ...

குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ.க தலைவரிடம் காண்பித்தனர். இதனால், அவர்கள் இருவரது வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் முறையிட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர்களது வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பிரதமர் வாழ்த்து

இதனையடுத்து, அமித்ஷா, ஸ்மிருதி இராணி மற்றும் காங்கிரசின் அகமது படேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து