முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் கனமழை - நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

காட்மாண்டு : நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மக்கள் வெளியேற்றம்

நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. மோராங் மாவட்டத்தில் உள்ள பிராட்நகர் விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

விமான நிலையம் மூடல்

பிராத்நகர் விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அந்த விமான நிலையம் மூடப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் 12 பேர் மாயமாகிவிட்டனர். பாதிப்புக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். போலீஸ் படை, ராணுவம், ஆயுத போலீஸ் படை, மீட்பு படை ஆகியவற்றை நேபாள அரசு களத்தில் இறக்கி, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து