முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. முதல்வர் ஆதித்யாவுக்கு கொலை மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை உத்திரப்பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினருக்கு டெல்லி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

டெல்லியில் உள்ள போலீஸ் கண்ட்ரோல் அறையில் பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு அடையாளம் தெரியாத ஒருவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் தொலைபேசியில் பேசினார். அதில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத்வை இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீங்கள் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார். இதனால் பரபரப்படைந்த டெல்லி போலீசார் இது குறித்து உத்திரப்பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கு தெரிவித்தனர்.

கொலை மிரட்டல் விடுத்தவர் தன்னை அடையாளம் காணமுடியாதவகையில் இண்டர்நெட் புரடொக்கல்  மூலம் பேசியுள்ளார். இதனால் அந்த நபரை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தவரை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்று டெல்லி மாநகர கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (சட்டம்-ஒழுங்கு) ஆனந்த் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

விசாரணையில் இந்த தொலைபேசியில் பேசியது வெறும் புரளி என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து