முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு - ஆலோசனைக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம் ...

அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை கீரின்வேஸ்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பகல் 1-20 மணிவரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மா.பா.பாண்டியராஜன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்து வேறுபாடு இல்லை

கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

இணைப்பு பற்றிய பேச்சு வார்த்தை சரியான வழியில் நடைபெற்று வருகிறது. ஒரிரு நாளில் நல்ல முடிவு எட்டபடும். எங்கள் அணி்யில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. குழப்பமும் இல்லை, இரு அணிகளின் இணைப்பு தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் விருப்பம்படியே நடைபெறும் என்று கூறினார்.

முட்டுக்கட்டை இல்லை

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க இணைப்புக்கு தான் முட்டுக்கட்டையாக இல்லை என்றும் கடந்த 8 மாதங்களாக உழைத்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க அழுத்தம் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். மேலும் எங்களின் அணித்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து