முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் காங்கிரஸ் தலைவராக சுஷ்மிதா தேவ் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அசாம் மாநிலம் சில்சார் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுஷ்மிதா தேவ் மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். இவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு மகளிர் காங்கிரஸ் தலைவராக ஷோபா ஓஸா நியமிக்கப்பட்டார். இவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி வெளியிட்ட அறிக்கையில்,

“காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் அனைத்து இந்திய மகளிர் காங்கிரஸ் புதிய தலைவராக சுஷ்மிதா தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்த ஷோபா ஓஸா விடுவிக்கப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த சந்தோஷ் மோகன் தேவின் மகளான சுஷ்மிதா, வழக்கறிஞராக உள்ளார். மகளிர் காங்கிரஸுக்கு புத்துயிர் அளிக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து