முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கொலை

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மனநல மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானவைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி அமெரிக்காவிலுள்ள விஜிடா நகரில் மனநல ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமையன்று அவரது மருத்துவமனையில் அச்சுதா ரெட்டி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், "மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டி புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் அவரது மருத்துவமனையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்" என்றனர்.இந்தக் கொலை தொடர்பாக உமர் தத் (21) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட அச்சுதா ரெட்டிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து