முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரோன் பிஞ்சைத் துரத்தும் காயம்: ஆஸி. அணியுடன் இணைகிறார் ஹேண்ட்ஸ்காம்ப்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச்-ன் கெண்டைக்கால் காயம் வீரியம் அடைந்துள்ளதால், ஹேண்ட்ஸ்காம்ப் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டபோது, அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச்-க்கு கெண்டைக்காலில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் வீரியம் அடைந்ததால் தொடர் முழுவதும் பிஞ்ச் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் காயம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு எடுத்தால் மீதமுள்ள போட்டிகளில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பிஞ்ச்-க்குப் பதிலாக மாற்று வீரராக ஹேண்ட்ஸ்ஹாம்பை ஆஸ்திரேலியா அணி அழைத்துள்ளது.

ஹேண்ட்ஸ்காம்ப் இன்று சென்னை வந்து அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் போட்டியில் ஹேண்ட்ஸ்காம்ப் விளையாடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து