எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை : நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1054 விசைப்படகுகளும், 6917 கண்ணாடி நாரிழை படகுகளும் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதி, பிரதான மற்றும் துணை அலை தடுப்புச்சுவர்கள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அலுவலக கட்டிடம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று நேற்று நாகையில் நடைப்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் நேற்று நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.,
குடிமராமத்து என்னும் திட்டம் விவசாயிகளின் கனவு திட்டம். இந்த மாவட்டத்தில் விவசாயம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க வேண்டுமெனபதற்காக குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை துவக்கி, விவசாயிகள் பங்களிப்போடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு இட்டு அதிக மகசூலைப் பெருக்குவதற்கு அம்மாவினுடைய அரசு திட்டமிட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பணிகள் நிறைவுபெறவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலமாக தூர்வாரப்படுவதால், இந்தப் பகுதியிலே பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீரை ஏரிகள், குளங்கள், குட்டைகளில் அதிக நீர் சேமிக்க இயலும். நிலத்தடி நீர் உயர்வதால் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது. குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றியிருக்கின்றது.
பொதுப்பணித்துறை மூலமாக, ஆசிய வளர்ச்சி வங்கி திட்டப் பணிகள், அரிச்சந்திரா நதியை நவீனப்படுத்துவதற்காக ரூபாய் 257.74 கோடி, அடப்பாறு ரூபாய் 168.35 கோடி, பாண்டவையாறு ரூபாய் 100.80 கோடி, வெள்ளையாறு ரூபாய் 178.17 கோடி, வளவனாறு வடிகால் 44.62 கோடி, வேதாரண்யம் கால்வாய் ரூபாய் 32.18 கோடி, மின்இறவை பாசனங்கள் ரூபாய் 14.59 கோடி, இப்படி மற்றவை 164.21 கோடி, ஆகமொத்தம் ரூபாய் 960.66 கோடி இந்த மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்களின் நன்மைக்காக அம்மா அவர்கள் போட்ட திட்டம். ஒரு நாட்டினுடைய விவசாயி, நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றான். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவேண்டுமென்று சொல்லி அம்மாவின் அரசு இவ்வளவு திட்டங்களை அறிவித்து, இன்றைக்கு இந்த திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
புதிய அறிவிப்புகள்
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1054 விசைப்படகுகளும், 6917 கண்ணாடி நாரிழை படகுகளும் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதி, பிரதான மற்றும் துணை அலை தடுப்புச்சுவர்கள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அலுவலக கட்டிடம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் இத்திட்டப் பணிகள் துவக்கப்படும். இத்திட்டத்தினால் தரங்கம்பாடி உள்ளிட்ட சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளகோவில், குட்டியான்டியூர், சந்திரபாடி மற்றும் சின்னூர்பேட்டை பத்து கிராமங்களில் உள்ள 14,470 மீனவர்கள் பயனடைவார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 விசைப் படகுகள் மற்றும் 1000 கண்ணாடி நாரிழை படகுகளும், பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதி, பிரதான மற்றும் துணை அலை தடுப்பு சுவர்கள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அலுவலக கட்டிடம், சாலை வசதிகள் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் இப்பணிகள் துவக்கப்படும். இத்திட்டத்தினால் காமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம் ஆகிய 6 மீனவ கிராமங்களைச் சார்ந்த 7,176 மீனவர்கள் பயனடைவார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம், ஆற்காட்டுத்துறையில் ஒரு நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியகூறு ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வுக்குத் தேவையான நிதி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தினால் ஆற்காட்டுத்துறை உள்ளிட்ட மணியன்தீவு, கோடியக்காடு, கோடியக்கரை, செருதலைக்காடு, பன்னல், சிந்தாமணிக்காடு, அன்னபேட்டை, கோவில்தாவு, வெள்ளமணல், வாய்மேடு ஆகிய 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயன் பெறுவார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் தற்போது இரண்டு பேருந்து நிலையங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும், இங்கு நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகராட்சிக்கு அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் தனியார் பங்களிப்புடன் (ஞஞஞ ஆடினந) சுமார் 13.77 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்காலத்தில் வீணாகும் உபரிநீரினை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடும் வகையிலும், கடல் நீர் உட்புகாமல் தடுத்திடும் பொருட்டும்,
சீர்காழி வட்டம், காவேரி பூம்பட்டினம், தர்மகுளம் அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், சீர்காழி வட்டம், திருநகரியில், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும், வேதாரண்யம் வட்டம், ஏகராசபுரத்தில் சக்கிலிய வாய்க்கால் குறுக்கே ஒரு தடுப்பணையும், வரும் நிதியாண்டில் (2018-2019) கட்டப்படும்.
மேலும் அடுத்த நிதியாண்டில் (2019-2020), கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடையில் கடுவையாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி, வேதாரண்யம் வழியாக கோடியக்கரையை இணைக்கும் 106.86 கிலோமீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இம் மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்திட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு 16.880 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் காவல் உட்கோட்டத்திலுள்ள திட்டச்சேரி காவல் நிலையம் மற்றும் நாகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களை பிரித்து பொதுமக்களின் நலன் கருதி நாகூர் வட்டம் திருக்கண்ணபுரத்தில் ஒரு புதிய காவல் நிலையம் தோற்றுவிக்க இந்த அரசு பரிசீலனை செய்யும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.