முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் சமையல் எரிவாயு இணைப்பு பெற இனிமேல் டெபாசிட் தேவையில்லை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு டெபாசிட் இன்றி எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை போல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு டெபாசிட் இன்றி எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு இணைப்பு தொடர்பாக புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியை மண்ணெண்ணெய் இல்லா பகுதியாக மாற்றும் நடவடிக்கையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து