முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ராம்நாத் கோவிந்த் வெளிநாடுகளுக்கு பயணம் - ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக 4 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். அவர் ஆப்பிரிக்க நாடுகளான ஜிபோட்டி மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது முக்கிய ஒப்பந்தங்களில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்து இடுவார் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் நீனா மல்கோத்ரா தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுடன் நட்புறவு கொண்ட நாடுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளும், ஆப்பிரிக்காவும் மிக முக்கியமான நாடாகும். அதனால் தான் ராம்நாத் கோவிந்த் முதல் பயணமாக அங்கு செல்வதாக ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் அசோக் மாலிக் கூறினார்.  45 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய குடியரசுத்தலைவர் எத்தியோஃபியாவிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் எத்தியோபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2016-ம் ஆண்டு 1 பில்லியன் டாலராகும். இந்த பயணத்தின் போது இரு நாடுகளில் உள்ள இந்தியர்களை ராம்நாத் கோவிந்த் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து