முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவ மழை இன்னும் 4 நாளில் துவங்க வாய்ப்பு?

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, நாடு முழுவதும் குமரி முதல் காஷ்மீர் வரை மழையை கொட்டிய தென்மேற்கு பருவ காலம் முடிவுக்கு வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 80 சதவீத நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவ மழை மே ௩௦ல் கேரளாவில் துவங்கியது. பின் படிப்படியாக கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா என காஷ்மீர் வரை சென்றது. முதற்கட்டமாக தென் மாநிலங்களில் மிதமாகவும் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் தீவிரமாகவும் மழை கொட்டியது. இதை தொடர்ந்து வடமேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வெள்ளக்காடானது.

இந்த மழை வட மாநிலங்களில் பெய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறுதியாக செப்டம்பரில் மஹாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடாகாவில் கொட்டி தீர்த்தது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்திலும் இயல்பை விட அதிக மழை பெய்தது.தமிழகத்தில் வழக்கத்தை விட31 சதவீதம் கூடுதல் மழை பெய்து தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக நாட்டின் தண்ணீர் தேவைக்கு போதிய மழை கொடுத்த தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளாவில் பெரும்பாலும் மழை விலகி உள்ளது.

இந்த மழையின் இறுதியாக வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசாவை நோக்கி நகர்ந்தது. மேற்கு வங்கம்–வங்கதேசம் இடையே கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநிலங்களில் புயல் அச்சம் நீங்கி காற்றின் திசை மாறி உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இன்னும் நான்கு நாட்களில் மேற்கிலிருந்து வீசும் காற்று நின்று கிழக்கு காற்று வலுப்பெறும். வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து