எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர்.
சூரசம்ஹார விழா
இந்து மதத்திலுள்ள 6 வகை வழிபாடுகளில் முருகனை வழிபடுவது கவுமாரம் என்று அழைக்கப்படுகிறது. முருகன் தமிழ்க்கடவுளாக பக்தர்களால் வணங்கப்படுகிறார். முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டிவிழாவாகும். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து தேய்பிறை பிரதமை தொடங்கி 6 நாட்கள் நடைபெறும். கந்த புராண கதையின்படி சூரர்களை முருகன் வதம் செய்ததை நினைவூட்டுவதாக விழா நடத்தப்படுகிறது. இந்நாட்களில் முருக பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவார்கள்.
மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்கிய குணங்களை ஞானத்தால் வெற்றிபெற வேண்டுமென்று தத்துவத்தை விளக்குவதுதான் சஷ்டி விழாவாகும். அறிவு ஆழமாகவும், அகலமாகவும், கூர்மையாகவும் இருக்க வேண்டுமென்பதை விளக்குவதுதான் முருகன் கையிலுள்ள ஞானவேல் ஆகும். இந்த ஆண்டு சஷ்டி விழா கடந்த 20ந் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அடுத்த கம்பத்து இளையனார் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் முருகன் பராசக்தி அம்பாளிடம் வேல்வாங்கி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிவலம் வந்து சின்னக்கடை தெருவில் வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரர்களை சம்ஹாரம் செய்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விரதமிருந்து வழிபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


