முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியிலுள்ள தேவர் சிலைகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை:

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 110வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியிலுள்ள தேவரின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 110வது ஜெயந்தி விழா இன்று பசும்பென்னிலுள்ள தேவர் நினைவிடத்தில் சிறப்புடன் நடைபெறுகிறது.இந் நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 110வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியிலுள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு அ.தி.மு.க சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்திடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது.இதையொட்டி கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூர் கிராமம்,டி.கல்லுப்பட்டி மற்றும் முத்துலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேற்கண்ட கிராமங்களில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைகளுக்கு கட்சி நிர்வாகிகள் புடைசூழ ஊர்வலமாக வந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாக்களில் முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,முன்னாள் கல்லுப்பட்டி ஒன்றிய துணைச் சேர்மன் பாவடியான்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,முன்னாள் கள்ளிக்குடி துணை சேர்மன் கண்ணன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன்,தங்கராஜ்,தர்மர்,வில்லூர் சரவணன்,ரவி,பிச்சைமணி,தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து