முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் 2-ஜி ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதியை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று அறிவிக்கிறார்.

முறைகேடு புகார்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நவம்பர் 7-ம் தேதி

2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்று தீர்ப்பு தேதியை அறிவிக்காமல், நவம்பர் 7-ம் தேதி (இன்று) வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார். இதோடு இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3-வது முறை ஒத்திவைப்பு

இதுதொடர்பாக நீதிபதி ஷைனி கூறுகையில், தீர்ப்புடன் கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தீர்ப்பு தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு (இன்று) தேதி வெளியாகும் என தெரிவித்தார்.

தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிப்பதால் ஆ.ராசா மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து