முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சுஷில் குமார்- சாக்‌ஷி மாலிக் - கீதா போகத் தங்கம் வென்றனர்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்தோரில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்‌ஷி மாலிக்,கீதா போகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தோரில் நடைபெற்று வந்தது. ஆடவருக்கான 74 கிலோ எடை பிரிவில் ஒலிம்பிக் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்று சாதனைப் படைத்தவரான சுஷில் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சுஷில் இறுதிச் சுற்றில் மிகவும் சிறப்பாக விளையாடினார். ரானாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய சுஷில் குமாரின் விளையாட்டை அனைவரும் பார்த்து ரசித்தனர். சுஷில் குமார் கடைசியாக 2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் தங்க பதக்கம் வென்றார். அதன்பின் தற்போதுதான் களம் இறங்கி உள்ளார்.

பெண்களுக்கான போட்டியில் சாக்‌ஷி மாலிக் மற்றும் கீதா போகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 62 கிலோ பிரிவில் சாக்‌ஷி மாலிக் அரியானாவின் பூஜா டோமரை வீழ்த்தி தங்கம் வென்றார். கீதா 59 கிலோ பிரிவில் ரவிதாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து